நன்றிக் கடனை மகன் தீர்த்துக் கொண்டான்




திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹாகத்தர்
thahiruae@gmail.com


Ø  வரலாற்றின் சாட்சியாம் அருங்காட்சியகங்களில்
பழைய பொருட்களை கூட
பாதுகாக்கிறார்கள் !
சமூகத்தின் சாட்சிகளான
முதியவர்களை இவர்கள்
ஒதுக்குகிறார்கள்!

Ø  நவீனம்
அதி நவீனம்
உயரமான கட்டிடங்கள் !
ஈனம்
மிக ஈனம்
முதிவர்கள் அங்கு இல்லை, அவை வெற்றிடங்கள்!


Ø  கொஞ்சி கொஞ்சி உணவூட்டிய அன்னை
ஒரு வேளை உணவுக்கு கெஞ்சுகிறாள்!
அன்போடு அரவணைத்த அன்னை
அவனிடமே பேச அஞ்சுகிறாள்!

Ø  குட்டி தாய் பசுவை விட்டு
பிரிக்கப்பட்டது!
குழந்தைகள்
தாயை விட்டுப்  பிரிந்து விட்டார்கள்!

Ø  பத்து மாதம்
கருவில் சுமந்து பெத்தவள்!
இன்றுதான்  வலியை உணர்ந்தாள்!
தான் தெருவில் விரட்டப்பட்டபோது !

Ø  அவனுக்கு
பாலும் அமுதும்
அன்னை அளித்த சொத்து!
வீடு வாசல்
தந்தை கொடுத்த சொத்து!
நன்றிக்கடனை மகன் தீர்த்துக் கொண்டான்
முதியோர் இல்லத்தில் சேர்த்து !

Ø  நடக்கக் கற்றுக் கொடுத்தவளுக்கு
இன்று நடக்க முடியவில்லை!
பேசக் கற்று கொடுத்தவளுக்கு
இன்று பேச முடியவில்லை!
எனினும் நன்றிக் கெட்ட மகன்
உதவ முன் வர வில்லை!

Ø  எத்தனையோ தடவை மகனின் அழுகையை
சேலைத்தலைப்பால் துடைத்தவள் இன்று அழுகையோடு !
அவனின் துணிகளை துவைத்தவள்
இன்று  துணி அழுக்கோடு!
மகன் உதறி தள்ளினான்
மனைவியோடு சேர்ந்து மிடுக்கோடு !

Ø  நாய் வாலாட்டி நன்றி தெரிவிக்கிறது  
இவன் போட்ட ஒரு எலும்புக்கு!
தாய்க்கு நன்றி பகர மறந்தான்
பாலூட்டி அவள் வலு சேர்த்த இவன் உடம்புக்கு !

Ø  பொறு சிறிது காலம் வரைக்கும்!
ஆம் உனது  முடிகள் நரைக்கும்!
அப்போது உனக்கும் உரைக்கும்!

Ø  அப்போது நீ உணருவாய்!
உன்னால் எதுவும் செய்ய முடியாமல் திணருவாய்!!


v   







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !