தலைவர்கள்


               திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
             தோஹா - கத்தர்
               thahiruae@gmail.com



Ø  வெள்ளையர்கள்
சுதந்திரத்திற்கு முன்
கொள்ளையடித்து
கொண்டுச்  சென்றது இங்கிலாந்து!
தலைவர்கள்
சுதந்திரத்திற்குப் பின்
கொள்ளையடித்து
கொண்டுப் போய் போடுவது சுவிட்சர்லாந்து!

Ø  மக்கள்
வாய்ப்பு வசதிகள் பெறத்தான் வாக்களிக்கிறார்கள்!
அரசியல்வாதிகள்
தாங்கள் வாய்ப்பு வசதி பெறத்தான் வாக்கு கேட்கிறார்கள்!

Ø  தேசத்தின் கொடிகள்
எங்களின் கைகளில் !
தேசத்தின் கோடிகள்
அவர்களின் கைகளில்!

Ø  தேசப் பற்று
மக்களிடம் !
தேசத்தின் வங்கிப் பற்று
தலைவர்களிடம் !

Ø  தங்கள் உயிரையே தருவதாக
தலைவர்கள் சொல்கிறார்கள்!
தொண்டர்கள்தான்
தீக்குளிக்கிறார்கள்!




Ø  நாட்டின் பணமெல்லாம்
அவர்களிடம்தான் 
இருக்கிறது!
எனவேதான் நாட்டிற்காக தங்களை அர்ப்பணம் செய்திருப்பதாக 
அவர்கள் சொல்கிறார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !