தாய்த்தமிழே

 

                                                                                பேராசிரியர் . அ   முஹம்மது அபூதாஹிர் 

தமிழே 

நீ எங்களுக்கு தாயானவள்!

நான் 

உனக்கு   சேயானவள்!


நீ  இங்குப் பிறந்தவள் !

சிவகங்கைச்சீமையின்  திருமகள்!

திரவியம் தேடி   இடம் பெயர்ந்தாய் 

இப்போது சிங்கப்பூரின் மருமகள்!


நீ  பெரும்பாலான  மொழிகளுக்கு 

நீதான் பாட்டி !

திராவிட மொழிகள் எல்லாம் 

உனது பேத்திகள்தான்  !


நீ தோன்றியதில் பார்த்தால் 

நீதான் மூத்தவள் !

தோற்றத்தில் பார்த்தால் 

இன்றும் நீ இளையவள்தான் !


எழுத்துக்கள் எல்லாம் 

உன் கழுத்துக்கள் ஆகும் !

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”  

உன் கருத்துக்கள் ஆகும் !


மெல்லினமும் வல்லினமும் 

உன் அங்கங்களாகும் !

மேதினியில் பூம்புகாரும் மதுரையும் 

நீ வாழ்ந்த சங்கங்களாகும் !


கீழடியில் தோண்டிப்பார்த்தால் 

நீதான் அகிலத்தில்  மூத்தக்குடி !

திருக்குறள் அடிகளை ஊன்றிப்படித்தால் 

நீதான் அறிவில் முதற்படி !


நவீன காலத்தில் காலத்தில் 

பாரதியாரால் 

ரொம்ப ஞானமிக்கவளானாய் !

பாரதிதாசனால் 

நிரம்ப மானமிக்கவளானாய்!


அவ்வை 

உன்னை படித்த அறிவு  மகள் !

கண்ணகி 

அதிகாரத்தையே  எதிர்த்து நின்ற உன் மகள்!


புறநானூறால்

நீ வீரத்தில்  பீரங்கியானாய் !

அகநாநூறால்

காதல்  கணைகளில்

நீ கவிதை பூங்காவானாய்!


நீதான் 

கருப்பையில் நான் கேட்ட மொழி !

கற்பை ,ஒழுக்கத்தை 

எனக்கு காட்டிய மொழி !


வாய் வழியாக 

வாழையடி வாழையாக 

பல்லாயிரமாண்டு  வாழ்பவளே 

என் தாய் வழியாக 

உன்னை சுவாசித்து பத்தாண்டுகளுக்கு மேல் 

நான் வாழ்கிறேன்!


உன்னை  வாசித்து 

உன்னில் யோசித்து 

உன் அறிவில் யாசித்து 

வருமாண்டுகளில் 

நானும் வாழ்வேன் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !