நீதியை நாம் நிலை நாட்டிட வேண்டும்,
பேராசிரியர் அ. முஹம்மது அபூதாஹிர்
|
மன்னனிடம் நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி, நீதிப்போராட்டத்தில் நின்ற
வீரம் நினைவிருக்கும்! |
|
பசு மாட்டிற்க்காக தன் மகனையே தேரின் காலில் இட்டு கொன்ற, மனு நீதி சோழன் ஈரம் நம் மனதில் நிலைத்து நிற்கும்.! |
|
ஆங்கிலேயரின் அநீதி
பீரங்கி முன் அங்குலம் கூட அசையாமல் நின்ற அண்ணல் காந்தியின் தீரம்
நம் கண் முன் நிற்கும்.! |
|
சாதி சகதியில் வீழ்ந்து கிடந்தவர்களின் சமூக நீதிக்காக நின்ற அம்பேத்கார் விவேகம் இன்றும் நிமிர்ந்து நிற்கும்!. |
|
தாழ்த்தப்பட்டவர்கள் சமநீதி பெற தள்ளாடிய போதிலும் தளராமல் நின்ற பெரியாரின் தியாகம் என்றும் நிலைத்து நிற்கும்.! |
|
வழக்காடு மன்றத்திற்கு மட்டும்
உரியதல்ல நீதி, அது வழக்கத்தில் அனைவருக்கும் அவசியமாகும்! |
|
வாதத்தில் அடிப்படையில்
மட்டுமே சாத்தியமானதல்ல நீதி, சத்தியமாகவும் அது சமர்ப்பிக்கப் பட வேண்டும்! |
|
நீதி வலிமையுள்ளோர் பக்கம் மட்டுமே வளைந்து நின்றால் அநீதி! |
|
நீதி பணக்காரர் பக்கம் மட்டுமே
பக்கச் சார்பாய் போனால்
அது படு அக்கிரமம்!. |
|
நீதி தராசு நிறைய காசின்
பக்கம் சாய்ந்து விடக்கூடாது! நீதி தேவதை பெரிய மனிதர்
முன் பணிந்து விடக்கூடாது! |
|
குற்றவாளி நீதி முன் தப்பித்து விடக்கூடாது நிரபராதி நிச்சயம் தண்டிக்கப் படவே கூடாது! |
|
நீதியை நிலை நாட்டிட வேண்டும்
அது நமக்கு பிடிக்காதவர்க்கு
சாதகமாய் இருந்தாலும்! |
|
நீதியை நிலை நாட்டிட வேண்டும்
அது நம் அன்பானவர்களுக்கு
பாதகமாய் இருந்தாலும்! |
|
நீதியை நாம் அனைவரும் நிலை நாட்டிட வேண்டும், என்ன விலை கொடுத்தேனும் ஏன்? தலை கொடுத்தேனும்! |
கருத்துகள்
கருத்துரையிடுக