தலைவர்கள்
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா - கத்தர் thahiruae@gmail.com Ø வெள்ளையர்கள் சுதந்திரத்திற்கு முன் கொள்ளையடித்து கொண்டுச் சென்றது இங்கிலாந்து! தலைவர்கள் சுதந்திரத்திற்குப் பின் கொள்ளையடித்து கொண்டுப் போய் போடுவது சுவிட்சர்லாந்து! Ø மக்கள் வாய்ப்பு வசதிகள் பெறத்தான் வாக்களிக்கிறார்கள்! அரசியல்வாதிகள் தாங்கள் வாய்ப்பு வசதி பெறத்தான் வாக்கு கேட்கிறார்கள்! Ø தேசத்தின் கொடிகள் எங்களின் கைகளில் ! தேசத்தின் கோடிகள் அவர்களின் கைகளில்! Ø தேசப் பற்று மக்களிடம் ! தேசத்தின் வங்கிப் பற்று தலைவர்களிடம் ! Ø தங்கள் உயிரையே தருவதாக தலைவர்கள் சொல்கிறார்கள்! தொண்டர்கள்தான் தீக்குளிக்கிறார்கள்! Ø நாட்டின் பணமெல்லாம் அவர்களிடம்தான் இருக்கிறது! எனவேதான் நாட்டிற்காக தங்களை அர்ப்ப...