நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள்

-செங்கிஸ் கான்

காவிகள் நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள்
வெள்ளம் எங்களை இணைத்து விட்டது !
பள்ளிவாசலை இடித்த பாவிகளே பாவிகளே !
பாருங்கள் பள்ளிவாசல்கள் நிவாரண முகாம்களாக !
இல்லாத ராமனுக்கு ஆலயம் கேட்டு பள்ளிவாசலை இடித்த
பொல்லாத காவிகளே ! பாருங்கள் எங்கள் பள்ளிவாசல்களை !
நிவாரண முகாம்களாக அவை பயன்படுகின்றன !
சாதிபேதமின்றி அனைத்து மக்களும் தங்கி உள்ளனர் !
அங்கு நோன்புக்கஞ்சி அண்டாக்கள் எல்லாம்
பசிப்பிணி போக்கும் அட்சயப்பாத்திரங்களாக !
மாட்டுக்கறி வைத்திருந்ததாக அஹ்லாக்கை அடித்துக் கொல்ல
கோவிலில் மணியடித்து கூட் டம் கூட்டியவர்களே !
பாருங்கள் எங்கள் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள்
பாதிக்கப்பட்டவர்களுக்காக முழங்குவதை !
கடப்பாரை கொண்டு ஆலயம் இடித்த காவிகளே !
கோவிலை சுத்தம் செய்யும் சகோதரர்களை பாருங்கள்!
கருவில் உள்ள குழந்தையைக் கிழித்தெடுத்து
தீயிலிட்டு கொன்ற பாவிகளே !
கர்ப்பிணித் தாயை கரை சேர்த்ததற்காக முஸ்லிம் சகோதரனின் பெயரை தன குழந்தைக்கு வைத்த இந்துச் சகோதரியைக் கேளுங்கள்!
முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு போகச் சொன்னவர்களை
முகநூளில் கிழிக்கும் எங்களின் இந்துச் சொந்தங்களை பாருங்கள் !
இனி உங்கள் மதவாதம் எடுபடாது!
காவிகள் நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள்
வெள்ளம் எங்களை இணைத்து விட்டது !
எங்களின் இந்துச் சொந்தங்களின் துணையோடு
இனி பாபர் மஸ்ஜிதை கட்டி எழுப்புவோம் !
இன்ஷா அல்லாஹ் இது நடந்தே தீரும்!

[திருச்சியில் MMMK நடத்திய டிசம்பர் -6 போராட்டத்தில்
எனது உரையில் இருந்து .......]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !