உன்னோடு இருந்த நாட்கள்



Ø  அன்பே
பூக்கள் எதுவும் பேசியதில்லை
உன்னைத் தவிர !
Ø  அருகில்
பலர் இருந்தாலும் தனிமையையே உணர்கிறேன்
நீ இங்கே என்னுடன் இல்லாததால் !

Ø  முள்ளாய் குத்திய
என் வாழ்க்கைப் பாதையில்
அழகியப் பூவாய் வந்தவள் நீ !
Ø  புயலடித்த
என் வாழ்க்கையில்
ஒதுங்க அமைதித் தீவாய் வந்தவள் நீ !

Ø  உன்னுடன் இருந்த
நாட்கள் எல்லாம்
என் கண்ணுடன் இருக்கிறது!
Ø  நீ என்னுடன்
தினமும் இருப்பது போல
எனக்கு கனவுகள்  வருகிறது !

Ø   சுட்டெரித்த 
வெயிலில் ஒதுங்க 
நிழலாய் வந்தவள் நீ
சுற்றி இருந்த இருளில்  நடக்க 
நிலவாய் வந்தவள் நீ!


Ø  நீ அன்பென்னும் அலை கடலின் 
தண்ணீர் !
நீ என்னை கைப்பிடித்த நாள்
எனக்கு வந்தது ஆனந்தக்கண்ணீர்!

Ø  வானவில் தோன்றியப் பக்கம்
உனது வண்ணமுகம் பார்த்தேன் !
தென்றல் வீசிய திசையில்
உனது காலடி ஓசைக் கேட்டேன்

Ø  ரோசா மலர் சிரிக்க
தண்ணீர் துளிகள் தெறித்தது
கடும் உரைப்பனி வீசிய நேரத்தில்!
பாச மலர் நீ சிரிக்க
உன் ஆனந்தக்கண்ணீர் தெறித்தது என் மேல்
உன்னுடன் பேசிய நேரத்தில் !

Ø  ஆழிய கடலின்
அலைகளின் மொழியை
உன்னுடன் அளவளாவியப் பின்
நான் அறிந்தேன்!
அகராதியில் படித்த
வார்த்தைகள் அனைத்தையும்
உன்னைப் பார்த்தப்பின்
நான் மறந்தேன்!

Ø  மலர்கள் அனைத்தும்
உன்னை அடைய யுத்தம் செய்து
ரத்தம் வந்தது !
வாள்கள் எல்லாம்
உன்னை நெருங்க முனைய
முனைகள் உடைந்து
வாசனை வந்தது!

Ø  முடிந்த தேதிகளை
நான் கிழித்தப் பின்பும்
உன்னுடன் கழித்த நாட்கள் மட்டும்
என்னிடமே திரும்பி வந்தது !
எதிர்வரும் நாட்களோ
உன்னை வரவேற்ப்பதற்காக
என்னிடமே விரும்பி வந்தது !


 __________________________________


கருத்துகள்

  1. எல்லா வரிகளும் அருமை

    இந்த கவிதையில் எனக்கு பிடித்தவரிகள்

    "உன்னுடன் இருந்த
    நாட்கள் எல்லாம்
    என் கண்ணுடன் இருக்கிறது! "

    எல்லா வார்த்தைகளும் உங்கள் கவிதைலேயே முடிந்துப் போல் எண்ணத்த தோன்றுகிறது. இனி மற்றவர்கள் கவிதை எழுத எந்த வார்த்தை என்று சொல்ல ......!!!!


    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !