மூடனின் கிளிக் கூண்டில்


திருச்சி A.முஹம்மது காசிம்
tiruchykhasim@gmail.com

Ø  படித்தவன்

கணினியில் ஜோசியம் பார்க்கிறான்!

பாமரன்

கரடி ஜோசியம் பார்க்கிறான்!


Ø  தனது விதியே தெரியாமல் 

வீதிக்கு வந்த ஜோதிடனுக்கு

அடுத்தவனுக்கு

நாளை தேதியில் நடப்பது 

தெரியுமாம் அவனுக்கு!


Ø  சோம்பேறிக்கு

பூனை குறுக்கே போனாலும்

கெட்ட நேரம் தான்!

சாமார்த்தியக்காரனுக்கு

எல்லா நேரமும்

நல்ல சகுனம் தான்!


Ø  மூடன் வைத்திருக்கும்

கிளிக் கூண்டில்

ஆறு அறிவை அடகுவைக்கிறான்

படித்தவன்!



Ø  பொண்ணுக்கு ,

மாப்பிள்ளை பொருத்தமும் ,

சுப ராகும்  பார்த்துதான்  கல்யாணம் நடந்தது!

ஆனால்,

அதுவோ,

வெகு சீக்கிரமாய் விவாகரத்தில் முடிந்தது !


Ø  உனக்கு கண்டம் என்று

ஜோசியன் பேச்சைக்கேட்டு

தன்னை தானே அழித்துக் கொண்டவர் பலர்!

     ஆம்
அவர்களின் வாழ்க்கை

தற்கொலையில் முடிந்தது!

Ø  ஜோதிடன்

படிச்சவனுக்கு கூட தெரியாத

பல வித்தைகளை காட்டுவான்!

தன் பாச்சா பழிக்கும் வரை,

எல்லோரையும்

ஏமாற்றுவான்!



*********************************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !