உன்னோடு இருந்த நாட்கள்
Ø அன்பே பூக்கள் எதுவும் பேசியதில்லை உன்னைத் தவிர ! Ø அருகில் பலர் இருந்தாலும் தனிமையையே உணர்கிறேன் நீ இங்கே என்னுடன் இல்லாததால் ! Ø முள்ளாய் குத்திய என் வாழ்க்கைப் பாதையில் அழகியப் பூவாய் வந்தவள் நீ ! Ø புயலடித்த என் வாழ்க்கையில் ஒதுங்க அமைதித் தீவாய் வந்தவள் நீ ! Ø உன்னுடன் இருந்த நாட்கள் எல்லாம் என் கண்ணுடன் இருக்கிறது! Ø நீ என்னுடன் தினமும் இருப்பது போல எனக்கு கனவுகள் வருகிறது ! Ø சுட்டெரித்த வெயிலில் ஒதுங்க நிழலாய் வந்தவள் நீ சுற்றி இருந்த இருளில் நடக்க நிலவாய் வந்தவள் நீ! Ø நீ அன்பென்னும் அலை கடலின் தண்ணீர் ! நீ என்னை கைப்பிடித்த நாள் எனக்கு வந்தது ஆனந்தக்கண்ணீர்! Ø வானவில் தோன்றியப் பக்கம் உனது வண்ணமுகம் பார்த்தேன் ! தென்றல் வீசிய திசையில் உனது காலடி ஓசைக் கேட்டேன் Ø ரோசா மலர் சிரிக்க தண்ணீர் துளிகள் தெறித்தது கடும் உரைப்பனி வீசிய...