மூடனின் கிளிக் கூண்டில்
திருச்சி A. முஹம்மது காசிம் tiruchykhasim@gmail.com Ø படித்தவன் கணினியில் ஜோசியம் பார்க்கிறான்! பாமரன் கரடி ஜோசியம் பார்க்கிறான்! Ø தனது விதியே தெரியாமல் வீதிக்கு வந்த ஜோதிடனுக்கு அடுத்தவனுக்கு நாளை தேதியில் நடப்பது தெரியுமாம் அவனுக்கு! Ø சோம்பேறிக்கு பூனை குறுக்கே போனாலும் கெட்ட நேரம் தான்! சாமார்த்தியக்காரனுக்கு எல்லா நேரமும் நல்ல சகுனம் தான்! Ø மூடன் வைத்திருக்கும் கிளிக் கூண்டில் ஆறு அறிவை அடகுவைக்கிறான் படித்தவன்! Ø பொண்ணுக்கு , மாப்பிள்ளை பொருத்தமும் , சுப ராகும் பார்த்துதான் கல்யாணம் நடந்தது! ஆனால், அதுவோ, வெகு சீக்கிரமாய் விவாகரத்தில் முடிந்தது ! Ø உனக்கு கண்டம் என்று ஜோசியன் பேச்சைக்கேட்டு தன்னை தானே அழித்துக் கொண்டவர் பலர்! ஆம் அவர்களின் வாழ்க்கை தற்கொலையில் முடிந்தது! Ø ஜோதிடன் படிச்சவனுக்கு கூட தெரியாத பல வித்தைகளை காட்டுவான்! தன் பாச்ச...