இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது தாஹிர் பக்கம்: ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்

இது தாஹிர் பக்கம்: ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும் : திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com  முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான்...

இஸ்லாம் மதமா ? மார்க்கமா ?

திருச்சி  A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com                 தமிழில் மதம் என்னும் சொல் கடவுளை நம்புவது  , வணங்குவது மற்றும் சுக துக்க காரியங்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் செய்வது ஆகியவற்றுக்குத்தான் மக்களால் பயன் படுத்தப் படுகிறது . அவ்வாறே புரிந்துக் கொள்ளவும் படுகிறது . இஸ்லாமும் பெரும்பாலும் மதம் என்றே பலராலும்   தவறாக   புரிந்துக் கொள்ளப் படுகிறது . அவ்வாறே பேசவும் படுகிறது .  பொதுவாக கடவுளை நம்புவதால் மற்ற மதங்களுடன் இதனையும் மதம் என்றே ஒப்பிட்டு பேசப் பட்டாலும் அவ்வார்த்தை சற்றும் இஸ்லாமிற்கு பொறுத்தமானதல்ல . இஸ்லாம்  “ தீன் “  என்ற அரபி வார்த்தையால் குறிக்கப்படுகிறது  “ தீன் “  என்னும்  “ அரபி ”  வார்த்தைக்கு  “ மார்க்கம் ”  என்ற தமிழ்   வார்த்தையே சரியான பொருளாகும்  . குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் பெருமக்கள் தீன் என்ற வார்த்தைக்கு தமிழில் மதம் என்று  அல்ல ,  மார்க்கம் என்றே மொழி பெயர்த்துள்ளன...

ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com  முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான் .அந்த வசனத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வரும் வசனங்கள் படிப்பு ,எழுத்து,எழுதுகோல்  ஆகியன குறித்தும் அவற்றைக் கொடுத்த படைப்பாளானாகிய அல்லாஹ் பற்றியும் பேசுகிறது இதோ அவை “அவன் இரத்தக் கட்டியில் இருந்து மனிதனை படைத்தான்,படிப்பீராக உமது இறைவன் மாபெரும் கொடையாளி,அவனே எழுதுகோலை கொண்டு கற்றுக் கொடுத்தான்,மனிதனுக்கு அவன் அறியாதவையெல்லாம் கற்றுக் கொடுத்தான் (சூரா அலக் ( 96:1-5) “ நபி (ஸல்) அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் கல்வி கற்பது கடமையாகும் என்றார்கள் . அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா ? என்று நபியே! நீர் கூறுவீராக ’ என்று பேசும் குர்ஆன் “ கல்வி கொடுக்கப் பட்டோருக்கும் ஈமான் கொண்டோருக்கும் பல படித்தரங்களை உயர்த்துவான்” என்று கல்வியாளர்களுக்கு சுபச் செய்தி கூறுகிறது. நாம் எல்லாம் தெரியும் என்று ஆணவமோ இதை எப்படி இந்த வயதில் கற்பது .இதை எப்படி பிறரிடம் கேட்பது என்று வெட்கமோ படக்கூடாது .இமா...

ரமலான் சிந்தனைகள் - குர்ஆன் என்ன சொல்கிறது?

A.       முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com குர்ஆன்  படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே  “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது. மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை  செய்திடவும் கூடாது என்பது குர்ஆன் கூறும் ஏகத்துவத்தின் சாராம்சமாகும். குர்ஆன் மனித குலம் அனைத்தும் ஒரே ஆத்மாவில்  இருந்து படைக்கப் பட்டது.அவற்றில் இருந்து ஆண் பெண் இரு பாலரையும் அல்லாஹ்படைத்தான்.மனிதர்களில் மிகச் சிறந்தவர் இறையச்சம் உடையவரே என்கிறது குர்ஆன் . மனிதர்கள் சிந்திக்க வேண்டும். பரந்த பூமி ,விரிந்த வானம்,  உயர்ந்த மலைகள் ,அருந்தும் நீர், அவன் சாப்பிடும் கனிகள்,அவன் படைக்கப் பட்ட விதம் ஆகியன ஒவ்வொன்று குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும்.சிந்திக்க மாட்டீர்களா என குர்ஆன் பல இடங்களில் கேட்பது கேள்வி மட்டுமல்ல ,சிந்திக்க அழைப்பும...

மே 4: திப்பு எனும் மாவீரன் - ஒரு சிறப்பு பகிர்வு!

- பூ.கொ.சரவணன் திப்பு சுல்தான் மறைந்த தினம் இன்று .புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான். திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணி யம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு. இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது. ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார் ‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத...

குதூகல குடும்பம்!

                                                                 மு.அ. அபுல் அமீன் (தினமணி ,12/06/2014) குடும்பம் என்பது கணவன் மனைவியிலிருந்து துவங்குவதைத் தூய குர்ஆனின் 30-21 வது வசனம் ""நீங்கள் சேர்ந்து வாழக் கூடிய உங்கள் மனைவிகளை உங்களிடமிருந்தே உற்பத்தி செய்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணியிருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று. சிந்திப்போருக்குச் சிறந்த சான்றுகள் இதில் உள்ளன'' என ்று விளக்குகிறது. குடும்ப வாழ்வில் நிம்மதி நிலவ வேண்டும். நிம்மதி திருப்தியிலிருந்து தோன்றுவது. திருப்தி நிறைவிலிருந்து நிலை பெறுவது. இதனாலேயே இறுதி நபி (ஸல்) அவர்கள், ""உலகம் இன்பமானது. அதில் தலை சிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி'' என்றார்கள். (நூல்: முஸ்லிம்) முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்களைத் திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்திடுமாறு பகர்ந்தார்கள் இகத்தைத் திருத்திய இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள். அப்படி பார...

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெரும்பான்மையினர் Vs சிறுபான்மையினர் !.. ஒரு நினைவூட்டல் !

 நன்றி -   தக்கலை கவுஸ் முஹம்மத்   அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும் யூதர்கள், அ ங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன. “நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது.” முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக ...

மன்மோகன் சிங்க்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்  thahiruae@gmail.com புரோகிராம் செய்யப் பட்ட ரோபட் நடை, சோனியா காந்தியின் அறிக்கையை அப்படியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இன்றி அழகாக உச்சரிக்கும் கேம்பிரிட்ஜ் ஆங்கிலம்,எத்தனை வினாக்கள் எழுப்பினாலும் சரியாக மூன்று நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்கும் திறமை ,பல பிரச்சினைகள்,ஊழல்கள் கண்டும் பேசாமல் எப்போதும் சைலன்ட் மோடில் இருக்கும் அடக்கம் ஆகிய அற்புத குணங்கள் கொண்ட பத்தாண்டு கால பிரதமர் மன்மோகன் சிங் தானும் ஓய்வு பெற் று காங்கிரஸ் கட்சியையும் அடுத்த ஐந்தாண்டு காலம் ஓய்வெடுக்க வழி வகை செய்துள்ளார் எதிர்க் கட்சிகள் காரசார பிரச்சாரம்,தொடர்ந்து காலையில் எழுந்ததும் காம்ப்ளான் விளம்பரம் மாதிரி தொடர்ந்து மோடி பற்றிய விளம்பரம், மோடி மனைவி பெயரை மறைத்தார்,இளம் பெண்ணை உளவுப் பார்த்தார்,குஜராத் கலவரத்தை அடக்கத் தவறினார்,குஜராத் மற்ற மாநிலங்களை விட பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கிறது எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப் பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் இருந்தும் பி ஜே பி வெல்கிறது என்றால் காங்கிரஸின் மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சிதான்.நாளை...

திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..**

*திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..** சற்றே நீளமான மற்றும் அழகான பதிவு ... அன்புள்ள அம்மா எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று. வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக் கிற்து என்று தெரிய வருகிறது எத்தனை பொறுப்புகள் எத்தனை சுமைகள் எத்தனை எதிர் பார்ப்புகள் ? எத்தனை தியாகங்கள் எத்தனை ஏமாற்றங்கள் நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை. குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..இங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.. இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்ற்து போல் சொல்லி செல்ல இயலவில்லை.என் தேவைகளை விட அடுத்தவர் தேவைக...

நபி வழியில் நற்குணங்கள்

  திருச்சி A . முஹம்மது அபூதாஹிர்                                                      தோஹா – கத்தர் thahiruae@gmail.com பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “நபியே நீர் அழகிய நற்குணத்தின் மீது இருக்கிறீர் “ ( 68:4) ( முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக , கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (அல்குர்ஆன்: 3:159 )   . இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: Ø   ““நான் அழகிய குணங்களை முழுமைப் படுத்தவே அனுப்பப் பட்டுள்ளேன்.. Ø   இறை நம்பிக்கையில்  பரிபூரணம் பெற்றவர்கள் அதிசிறந்த பண்பாளர்களே ' Ø   ' உங்களில் சிறந்தோர...