நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்!
![]() |
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹா – கத்தர்
thahiruae@gmail.com
|
Ø அங்கே
ஒவ்வொருவருக்கும்
ஒரு குல வழிபாடு
இருந்தது!
ஆம்
அங்கே
பல தெய்வ வழிபாடு
இருந்தது!
Ø கவிஞர்கள்
அங்கே அன்பை
பேசவில்லை!
அம்பு வீச
சொன்னார்கள் !
படிக்க சொல்லவில்லை!
குடிக்க சொன்னார்கள்
!
மதி வளர்க்கச்
சொல்லவில்லை
மது குடிக்கச்
சொன்னார்கள்!
Ø அந்தப் புரங்கள்தான்
நகர்புறங்களை விட
வளர்ச்சிப்
பெற்றிருந்தன!
Ø பேரரசுகள்
மக்களின்
வாழ்க்கையைப்பற்றி
கவலைப்படவில்லை !
அவர்களிடம்
வாள் கையில்
எப்போதும் இருந்தது !
Ø வேட்டையாடுவது
அவர்களின் வீரத்தைக்
குறிக்கும் !
கோட்டையில்
கும்மாளமிடுவது
இதயத்தில் ஈரத்தைக்
குறிக்கும் !
Ø பக்கத்து நாடு
எப்போதும் பகை நாடு !
படையெடுப்பது
அவர்களுக்கு
உடையேடுப்பது போல !
Ø கவிஞர்களின்
வைரவரிகள் !
அரசர்களின்
வைரங்களுக்காக எழுதப்பட்ட
வரிகள் !
Ø அறிஞர்களின்
பொன் வரிகள்!
அரசர்களின்
பொன்னுக்காக எழுதப்பட்ட வரிகள் !
Ø யூத சமூகம்
மனித குல விரோத
சமூகமாக இருந்தது !
Ø மதகுருமார்கள்
படிச்சுக் கொடுத்ததை
விட
முடிச்சுப்
போட்டதுதான் அதிகம் !
மக்களின் உழைப்பு !
அவர்களின் வயிற்றுப்
பிழைப்பு !
Ø மக்கள்
மனோதிடத்தை விட
ஜோதிடத்தின் மீதுதான்
நம்பிக்கை வைத்திருந்தனர்!
எச்செயலையும்
நெறிப்பார்த்து அல்ல
“குறி “ பார்த்தே
தொடங்கினர் !
Ø வேதங்கள்
முடிந்த அளவு
திருத்தப்பட்டது !
மதகுருமார்களுக்கு
வேண்டியது
சேர்க்கப்பட்டது !
Ø உண்மை சொல்ல வேண்டிய வேதங்கள்
பொய் சொல்ல
ஆரம்பித்தன!
பொய்யை உண்மையென்று
ஆலயங்கள்
அங்கீகரித்தன !
Ø கருப்பு நிறம்
வெறுப்பு நிறமாகக்
காட்டப்பட்டது !
சிவப்பு நிறம்
சிறப்பான நிறமாகக்
காட்டப்பட்டது!
Ø எங்கும்
சாதி சகதியாய்
இருந்தது !
சமூகத்தில்
அநேகருக்கு அவமானமும்
அவதியுமாய் இருந்தது !
Ø விலங்குகளைக்கூட
புனிதமாக கருதினர் !
விளங்காத மனிதர்கள்
தம் இனத்தை இழிவாகக் கருதினர் !
Ø உயர்ந்த சாதி
பாவங்கள் செய்தாலும்
பரிசுத்தம்!
தாழ்ந்த சாதி
பிறக்கும் போதே அசுத்தம் !
Ø விலங்குகளின் சிறுநீர் புனிதம்!
மனித உமிழ் நீர் அசுத்தம்!
இரட்டைக்குவளைகள்!
Ø அசுத்தப்படுத்தபவர்கள்
சுத்தமானவர்களாம்!
சுத்தப்படுத்தபவர்கள்
அசுத்தமானவர்களாம்!
சாதி கொடுமைகள் !
Ø ஆசைப்படக்கூடாது என
மதகுருமார்கள்
பேசினர்
மக்களிடம் காசை
வாங்கிக்கொண்டு!
வேசியிடம்
போகக்கூடாது என
அவர்கள் பேசினர்
தாசிகளை வைத்துக்
கொண்டு !
Ø பெத்தெடுக்க தாயாய்
பெண் தேவைப்பட்டாள்!
கணவன் செத்து
விட்டால்
தீயில் எறியப்
பட்டாள்!
Ø பெண் குழந்தை பிறந்தவுடன்
தாய்ப்பாலுக்கு பதில்
கள்ளிப்பால்
கொடுக்கப் பட்டது !
மண்ணில் வாழவந்த பெண்
குழந்தை
உயிரோடு
மண்ணில் புதைக்கப்
பட்டது !
Ø கவிஞர்கள்
பாட்டு அடிகளில்
பெண்ணை
நிர்வாணப்படுத்தினர் !
காபாவைச் சுற்றி கடவுளின்
பெயரால் ஆடையில்லாமல்
அவளை வரச் செய்து அவமானப்படுத்தினர்
!
Ø ஏழாம் நூற்றாண்டு
எட்டுத்திக்கும்
மகத்தான ஒரு மனிதரின்
வருகைக்காக
காத்திருந்தது!
ஏதோ மாற்றாமல்
விட்டு வைக்கப்
பட்டிருந்த வேதங்களின் சில பக்கங்கள்
அந்தப் புனிதரின்
வருகையை
முன்னே அறிவித்திருந்தன!
Ø உலகம்
நன்மையைத் தேடிப்
புறப்பட்டது !
உண்மையைத் தேடி
மனிதர்கள்
அங்கு வந்து
கொண்டிருந்தனர் !
Ø இரத்தங்களாலும் யுத்தங்களாலும்
சிவப்பாயிருந்த பூமி
அமைதியை நோக்கி
சிந்திக்க தொடங்கியது!
Ø அறிவீனத்துடன்
அனைத்துக்கு முன்னும்
மண்டியிட்ட சமூகம்
அறிவுப்போருக்கு
தயாரானது !
Ø நரகத்திற்குச் செல்லும் எண்ணிக்கை
பூமியில் குறைய
ஆரம்பித்தது !
சுவனம் செல்ல
முன் பதிவுச்
செய்யப்பட்டது !
Ø அழகிய மக்கா நகரம்
ஏகத்துவத்தின் புனர்
நிர்மாணத்திற்கு
தயாரானது !
அறியாமக்களால்
வைக்கப்பட்டிருந்த
சிலைகள்
அகற்றப்படும் நாள்
நெருங்கியது !
Ø அவரது வருகையை அறிவிக்கவே
நான் வந்தேன் என
இயேசுவின்
முன்னறிவிப்பை
பேசத் தொடங்கியது
கிறிஸ்தவ சமூகம் !
Ø உன்னைப்போல் ஒருவரை
பாரான் மலையில்
எழுப்புவேன்
சினாய் மலையில் தேவன்
மோசேயிடம் பேசியது
சிந்தித்துப்
பார்த்தது யூத சமூகம் !
Ø கிழக்கின் வேதங்களும்
அவரின் அடையாளத்தை
அழகாக பேசின!
ஆழமான பேசின!
Ø போராட்டங்கள் இல்லாமல்
உலகம் விடுதலைக்குத்
தயாரானது!
கோரிக்கை வைக்காமல்
உரிமைகள்
அனைவருக்கும் கொடுக்கப்பட போகிறது !
Ø அரக்கத்தனத்தால்
அடிமைப்படுத்திய
அரசர்கள்
அச்சப்பட்டார்கள்
ஆட்சி வீழப் போகிறது
என !
மூடத்தனத்தால்
ஏமாற்றிய
புரோகிதர்கள்
வயிற்று எரிச்சல்
பட்டார்கள்
வயிற்றுப் பிழைப்பு
போகப் போகிறது என !
Ø இறைத்தூதர் ஈஸா
விண்ணில் ஏற்றப்பட்டு
ஐந்நூறு ஆண்டுகள் கழிந்தது
!
இறுதி இறைத்தூதர்
முஹம்மது
மண்ணில்
தோன்றப்போகும் நாள்
நெருங்கி வந்தது !
Ø ஆம் !
ரபியுல் அவ்வல் மாதம்
திங்கட்கிழமை காலை
பலித்தது வேதங்களின்
முன்னறிவிப்பு
மக்கா மாநகரில்
நிகழ்ந்தது
மாநபி முஹம்மது (ஸல்) அவர்களின்
பிறப்பு !

கருத்துகள்
கருத்துரையிடுக