சூனியம் மூலம் பி ஜே தற்கொலையா ? கொலை முயற்சியா ?
அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை ஏற்று மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் வைக்க திருச்சியை சேர்ந்த அகோரி மணி கண்டன் என்பவர் முன்வந்துள்ளார்.அதன் மூலம் பி ஜே அவர்களை அவர் இறக்க செய்ய வேண்டும் என்றும் அப்படி இறந்தால் சூனியக் காரருக்கு 50 இலட்சம் தவ்ஹீத் ஜமாஅத் கொடுக்குமாம் . குர்ஆனில் தெளிவாக வந்துள்ளது ஹாருத் மாருத் சூனியத்தை கற்றுக் கொடுத்து விட்டு இது ஒரு சோதனை இதில் வீழ்ந்து நிராகரிப்பாளர் ஆகி விடாதீர் என்று .சூனியக் காரர்கள் நபி மூஸா (அலை )முன் அவர்கள் தோல்வி அடைந்து ஈமான் கொண்டனர் என்று .நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்ட போது இரு குள் சூராக்கள் இறக்கப் பட்டு அவை நீக்கப் பட்டது என்று ஹதீஸில் வந்துள்ளது .சூனியக்காரர்கள் என்பதற்கு "சாஹிரூன் " என்ற அரபி வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது .இன்று அல்ல என்று பயன் படுத்தினாலும் அதன் அர்த்தம் சூனியக் காரர்கள் என்பதுதான் .சூனியம் என்பது இருக்கிறது.அது முன்னால் செய்யப் பட்டது.இன்று வேண்டுமானால் அது செயலன்றி இருக்கலாம் .எனினும் சூனியமே இல்லை என்று ஆகி விடாது .நாத்திகர் போன்று எதை எடுத்தாலும் மறுத்து...