அன்பே !




திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
             தோஹாகத்தர்
thahiruae@gmail.com      


Ø  மலர் சூட நீவருவது
அழகுதான் !
அதை விட மலர்ந்த முகத்துடன் வா
மிகுந்த அழகு !          

Ø  நெத்திச்  சூடியை விட
நிரந்தர அழகு
புத்தியால் சூடு

Ø  அணிந்துக் கொள்
காதில் தோடு !
அதை விட அழகு
நல்ல விசயங்களுக்கு
உன் காதைக் கொடு !

Ø  எதுக்குப் பவுடர் ?
முகத்துக்கு அழகு
புன்னகையால் பூசு!

Ø  ஒதுக்கு லிப்டிக்கை ,
உதட்டுக்கு அழகு
பிறர் மனம் புண்படாமல் பேசு !

Ø  மூக்குத்தியெல்லாம்
எனக்குப் பிடிக்காது !
மற்றவரைக் குத்திப் பேசாதே
அது போதும் !

Ø  நீ கொலுசு அணிந்து வருவது

அழகுதான்  !

பணிவாய் பூமியில் நடந்தது வா

அது அதை விட  மிகுந்த அழகு !


Ø  அன்பே

ஆபரணங்கள் நாளாக சேதாரமாகும் !

அழகிய குணங்களால்
     உன்னை அலங்கரித்துக் கொள் !
     அதுவே அழியாத ஆதாரமாகும் !


**********************************************************************









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !