இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் அவர்கள் மவுனமாக இருந்தார்கள் ?

திருச்சி A. முஹம்மது அபூதாஹிர்   thahiruae@gmail.com தோஹா – கத்தார்  தவ்பீக் சுல்தானா, பதின்மூன்று வயதே ஆன அச்சிறுமி அன்று அறுபத்து ஏழாம் ஆண்டு நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாட பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். .அவளுக்குத் தெரியாது அன்றுதான்   அவளின் சுதந்திரம் மட்டுமல்ல அவளின் உயிரே பறிக்கப் படப் போகிறது என. . வடக்கின் டெல்லி முதல் தெற்கின் திருச்சி வரை கொடியேற்றிய பிரமுகர்கள் சுதந்திர தின முழக்கங்களை வழக்கம் போல் நீட்டி முழங்கினார்கள்.கூடியிருந்த மக்களுக்கு இனிப்பை வழங்கினார்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் போனதுதான் மாற்றமே தவிர மற்றபடி சுதந்திரம் எனபது தினமாகத்தான் அனுசரிக்கப் படுகிறது   என்பதும்   தினம் தினம் அச்சமும் வன்முறையுமே அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியா ஆங்கிலேயர் கால அடிமை இந்தியாவை நினைவுப் படுத்துகிறது .என்பதும்தான் அனைவருமே அறிந்த உண்மையாகும் . சுதந்திரம் எனபது கார்ப்பரேட் முதலாளிகள் ,ரவுடிகள் ,கொலைகார்கள் கொள்ளைக் காரர்கள் ,அரசியல்வாதிகள் ,கிரிக்கெட்காரர்கள் ,சினிமாக் காரர்கள் என இவர்களுக்குத்தான் கருத்து சுதந்திரம் ...

அந்தக் கண்கள்

திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com தோஹா – கத்தார் (நாளை எனது அன்னையாருக்கு கண் அறுவை சிகிச்சை நடை பெற இருக்கிறது . நல்ல தெளிவான கூரிய பார்வை கிடைக்க அவருக்கு துஆ – செய்யுங்கள் ) Ø   என்னை சுமையாக அல்ல அவர் பார்த்துகொண்டது அவரது   கண் இமையாக ! Ø   அந்தக் கண்கள் இப்போது பார்வை கொஞ்சம் மங்கலாய் தெரிகிறது ! அதை அறிந்த   நாட்களில் இருந்து   எனக்கு நெஞ்சத்தில் கவலையாய் வருகிறது ! Ø   இரவுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் என் கண்கள் இருந்த போது அவரது கண்கள் இரக்கத்தோடு எனக்காக விழித்திருந்தது ! Ø   பள்ளிக்குப்   போய் விட்டு நான் வீட்டுக்கு வரும் நேரம் வாசலில் எதிர்ப் பார்த்து ஆவலோடு அவரது கண்கள் காத்திருந்தது ! Ø   காணாமல் நான் போன போதும் என் கால் ஊனமாய் ஆன   போதும் அந்தக் கண்கள்தான்   கண்ணீரை சொரிந்தது ! Ø   துன்பங்கள் என்னை , துரத்திய தருணங்களில் அன்பான அந்தக் கண்கள் கருணையை சொரிந்தது Ø   சாப்பிடும் நேரம் சரியாக சாப்பிடுகிறேனா என்று ...

சேஷாலம் முதல் அப்துல்லாஹ் வரை - பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் ஒரு பாடம்

திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் . தோஹா – கத்தர் thahiruae@gmail.com அது   2010 டிசம்பர் 25.       கத்தார் தலைநகர் தோஹா வந்திருந்தார் .டாக்டர் பெரியார் தாசன் அப்துல்லாஹ் .மாபெரும் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது தாம்   இஸ்லாத்துக்கு நடந்து பாதையையும் ,தாம் கடந்து வந்த பல பாதைகளையும் விளக்கினார் .அதில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தினை அழகாக விளக்கியதோடு நில்லாமல் முஸ்லிம்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லும் பொறுப்பு உள்ளது என்ற அறிவுரையையும் முஸ்லிம்களுக்கு வழங்கினார் . நிகழ்ச்சி முடிந்தப் பின் மறுநாள் ஒருமணிநேரம் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் சென்று அவருடன் நான் பேசினேன் .சமூகம் பற்றியல்ல , உறவுகளைப்   பிரிந்து   தூரத்தில் வாழும் தனிமையும் குழப்ப எண்ணங்களால் உள்ளத்தில் ஓரத்தில் கவலைகளும் என்னை தொற்றி இருந்ததால் .மனோதத்துவ நிபுணரான   அவரிடம் ஆலோசனை பெறவே அந்த சந்திப்பு. .நபி வழி நின்று அழகாக எனக்கு வாழ்வின் நிலைகளை வாழ வேண்டிய முறைகளை விளக்கினார். அந்த சந்திப்பு என் வாழ்வில் என்றும்     மறக்க முடியாதது . பேராசிரியர் அ...