இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரமளான் வந்து விட்டது!

- திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob  .974 + 66928662 பாவங்களே வாழ்க்கையாகி விட்ட மனித சமூகம் தம்மை பரிசுத்தப் படுத்திக் கொள்ள காலம் நெருங்கி விட்டது. இந்நிரந்தரமற்ற இவ்வுலகிலிருந்து விடைபெற்று செல்லும் நாம் மறுவுலகில் சுவனத்திற்கு நம்மை  முன்பதிவு செய்யும் தருணம் வந்து விட்டது. பூமிப் பந்து முழுவதும் இன்னும் சில நாட்களுக்குள் ரமளானுக்குள் நுழைய இருக்கிறது. இவ்வுலகிற்கே நேர்வழிக் கிடைத்த மாதம் வரப் போகிறது இதோ! இவ்வுலகம் மாறப் போகிறது. ரமளான்  மாதம் பற்றியும் அதில் நோன்பு நோற்க வேண்டியது பற்றியும்  இதோ குர்ஆன் கூறுகிறது ரமளான் மாதம் எத்தகையதென்றால் , அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் , மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும் , சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ , அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ , பயணத்திலோ இருந்தால் , அவர் மற்ற நாட்களில் கணக்கிட...

எப்போது முடிவுக்கு வரும் இந்த பாரபட்சம் ?

- திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com மும்பையில் மதத்தை காரணம் காட்டி ஹரே கிருஷ்ணா என்னும் தனியார்  ஏற்றுமதி நிறுவனம் ஜீஷான் கான் என்னும் எம்.பி.ஏ முஸ்லிம் முஸ்லிம் பட்டதாரிக்கு வேலை தர மறுத்துள்ளது. அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அதை வெளிப்படையாகவே அந்நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது . Thanks for your application. We regret to inform you that we hire only non-Muslim candidates,” உங்கள் விண்ணப்பத்துக்கு நன்றி. மன்னிக்கவும் நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மற்றுமே பணியில் அமர்த்துகிறோம் “ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போலாகும். இன்று முஸ்லிம்கள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் புறக்கணிக்கப் படுகிறார்கள்.ஒதுக்கப் படுகிறார்கள்.இதை இந்திய மொழியில் தீண்டாமை ) untouchbality ) என்றும் மேற்கத்திய மொழியில் இன ஒதுக்கல் (racial discrimination ) என்றும் சொல்லலாம்.ஒரு காலத்தில் சமூகத்தால் நிகழ்த்தப் பட்ட கொடுமைகள் இப்போது கார்ப்பரேட்  நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக சொல்லாமலே நிகழ்த்தப் படுகிறது...