தவறை ஒப்புக் கொள்வது தலை குணிவல்ல!
திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob .974 + 66928662 சுய மரியாதை என்ற பெயரில் வரம்பு மீறிய செயல்பாடுகள், சமூகத்தில் மிகவும் சிறந்த நபராக தம்மை தாமே கருதிக் கொள்ளல் ஆகியவற்றின் மூலம் மற்ற மனிதர்களுக்கு அநீதி இழைத்தல்,அவ மரியாதை செய்தல், அவதூறு கூறுதல்,தவறு இழைத்தல்,அல்லது தவறான கருத்தை சொல்லுதல் ஆகியவற்றை சிலர் செய்கின்றனர். இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இச்செயல் பாடுகள் எதுவும் நீதி மற்றும் நெறிகளுக்கு முரணானது என்று தெரிந்தப் பின்னரும் வருத்தப் படவோ அதை திருத்திக் கொள்ளவோ அவர்கள் முன் வருவதில்லை. இதில் பெரியோர்கள் ,பிரமுகர்கள்,தலைவர்கள் ,அதிகாரிகள் ஆகியோர்தான் குறிப்பிடத்தக்கவர்கள். அருள்மறை குர்ஆனில் அல்லாஹுத் தஆலா கூறுகிறான் “பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ( 2:37 ) இறைத்தூதர் முஹம்மது ...