இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமியர்கள் கால்நடைகளை வேதனை தரும் முறையில் அறுப்பது ஏன்?

கேள்வி இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா? பதில்: ‘ஸபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன். சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார்: நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்? மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று. மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – ‘ஷாபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை...

தெண்டுல்கர் தேசத்திற்கு தந்தது என்ன ?

  திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com சச்சின் தெண்டுல்கர் 200 வது டெஸ்ட் மேட்சை முடித்து விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதான் இந்தியப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக இன்று வெளி வந்துக் கொண்டிருக்கிறது. உலகம் கவலை ,ரசிகர்கள் சோகம்   ,கிரிக்கெட் உலகின் எதிர் காலம் என்று என்னமோ அஞ்சலி செலுத்துவது   போன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கிரிக்கெட் எனபது ஒரு கேளிக்கை ( entertainment ) அதனை ரசிக்க வேண்டும்,அதில் பங்கேற்கும் திறமையான வீரர்கள் பாராட்டப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது . அதே நேரத்தில் இந்தியா போன்ற வறுமை,வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை,வன்முறை,சாதி மத பிரச்சினைகள் ஆகியவற்றால் அன்றாடம் அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஒரு விளையாட்டை பிரதானப்படுத்தி அதற்க்கு செலவழிப்பது, ஏழை மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு விருதை அள்ளிக் கொடுப்பது,அவர்கள் ஒரு நாட்டிற்கு எதிராக விளையாடும் விளையாட்டை நாட்டிற்காக போராடுவது போல சித்தரிப்பது,ஒரு படி மேலே போய் அவர்களை கடவுளாகவே உருவ...