இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஞ்ஞானி ஹெர்ஷலின் தவறை சுட்டிக் காட்டிய குர்ஆன்!

படம்
வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி விண்வெளியை ஆராய்ந்து பல உண்மைகளை கண்டு பிடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவருக்கு முன்னால் 1609 ல் விஞ்ஞானி கலீலியோ பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த அளவு விண்வெளித்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் அந்த காலத்தில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாததே காரணம். நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பெருவெளி என்ற வரையில்தான் கலீலியோவால் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முனனேற முடியவில்லை. விஞ்ஞானி ஹெர்ஷல் 1783 வாக்கில் தொலைநோக்கியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி குறிப்பிடப்படும்படியான பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஒருநாள் அவர் ஆகாயத்தின் வட திசைக் கோளத்தில் தமது ஆய்வை மேற்கொண்டிருந்த போது அவரது பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. ' அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை. வெளி உலகிற்கு ஒரு ஜன்னல் ' எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் தனது சகோதரியை அழைத்து வந்து தான் கண்ட காட்சியை அவருக்கும் காட்டினார். இதே போல் இவரது மகன் ஜான் என்...

இஸ்லாமின் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம்!

பேரா : ஜெ. ஹாஜா கனி ஓரு நாட்டின் நனிசிறந்த நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கும் கூறுகளைத் தன் இயல்பிலேயே கொண்டிருக்கும் இ ஓரு நாட்டின் நனிசிறந்த நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கும் கூறுகளைத் தன் இயல்பிலேயே கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம், விடுதலைப் போரின் விதையாய், விருட்சமாய், விழுதுகளாய் நின்ற, மகத்தான தியாகிகளின் விருப்பங்களுக்குக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, உலகின் மிகச்சிறந்த அரசியல் சாசனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை. அதேநேரம், சுதந்திரம் பெற்று அறுபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகும், சிறுபான்மை இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலை, சகோதர தலித் சமுதாயத்தின் நிலையைவிடவும் மோசமாக உள்ளது என்கிறது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் அறிக்கை. முஸ்லிம்களின் இத்தகைய அவலமான சூழலுக்குக் காரணம் முஸ்லிம்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்ட அரசியல் சூ...

தாய்லாந்து விஞ்ஞானியின் மாற்றம்

படம்
. டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr. Tagatat Tejasen)  லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும்.  அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் அளித்தோம். அப்போது அவர் தங்களது புத்த சமய புத்தகங்களில் கரு வளர்ச்சி நிலைகள் பற்றிய சரியான விவரங்கள் உள்ளன என கருத்து தெரிவித்தார். நாங்கள் அந்த புத்தகங்கில் உள்ள விவரங்களை அறிய மிக ஆவலாய் உள்ளோம் எனவும் அந்த புத்தகங்களைப் பற்ற அறிய விரும்புவதாகவும் கூறினோம். ஒரு வருடம் கழிந்து பேராசிரியர் டிஜாஸன் “மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு” தேர்வாளராக வந்தார். நாங்கள் அவர் கடந்த வரு...